திருவனந்தபுரம், ஜுன் 8- இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் கேரளா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. உணவுப் பாதுகாப்பில் கேரளா முதலிடம் பெறுவது வரலாற்றில் இதுவே முதல்முறை. உணவுப் பாதுகாப்பில் கேரளா வின் முறையான துல்லியமான நட வடிக்கைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் இது என்று சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். முந்தைய 3 ஆண்டுகளின் வருவாயை விட 2022-23இல் 193 சதவிகிதம் அதிக வருவாயை உணவுப் பாதுகாப்புத் துறை ஈட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் எப்போ தும் இல்லாத அளவாக ரூ.28.94 கோடி அதிகபட்ச வருவாய் ஈட்டியது. ரூ.15.41 கோடி யுடன் 2018-19 இல் அதுவரை உள்ள அதிக வசூலாக இருந்தது. தற்போது அதில் இரட்டிப்பு வருவாய் அதிகரிப்பு ஏற்பட்டுள் ளது. உணவுப் பாதுகாப்புத் துறையினால் மேற்கொள்ளப்பட்ட முறையான செயற்பாடு களினால் இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ள தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த சாதனையை எட்டுவதற்கு உழைத்த உணவுப் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் அனைவரையும் அமைச்சர் பாராட்டினார்.
ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் வழங்கப் பட்ட கேடயத்தையும் விருதையும் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா விட மிருந்து கேரள உணவு பாதுகாப்பு ஆணை யர் வி.ஆர். வினோத் பெற்றுக் கொண்டார். தேசிய அளவில் உணவுப் பாதுகாப்புத் துறையின் அமலாக்கச் செயல்பாடு களான உணவுப் பாதுகாப்பு ஆய்வு, மாதிரி சேகரிப்பு, தீர்ப்பு/வழக்கு, வழக்குகளுக் கான மாதிரி ஆய்வு, என்ஏபிஎல் அங்கீ கரித்த ஆய்வகங்களின் எண்ணிக்கை, ஆய்வகங்களில் சிறப்பான சோதனை, நடமாடும் ஆய்வகத்தின் செயல்பாடு, உணவு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஃபோஸ்டேக் பயிற்சி , எப்எஸ்எஸ்ஏஐ-யின் பல்வேறு சரிவிகித உணவு முன்முயற்சிகள், மாநில அளவி லான உணவுப் பாதுகாப்புத் துறையின் பல்வேறு உண்ணும் உரிமை முயற்சிகள், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுமார் 40 செயல்பாட்டுத் திறன்களை மதிப்பீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தேசிய உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் தரம் தீர்மானிக்கப் படுகிறது. மாநில அரசின் உணவுப் பாதுகாப்பு கிராமப் பஞ்சாயத்துத் திட்டம் 140 ஊராட்சிகளில் செயல்படுத்தப் பட்டுள்ளது. 500 பள்ளிகளில் பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு (SNF@School) திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநில அள வில் பொது மக்களுக்கு சுமார் 3000 உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பு கள் நடத்தப்பட்டுள்ளன. தேசிய உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் இடம் பெற பொதுமக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படு கிறது.