திருவனந்தபுரம், மார்ச் 2- சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோ தாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வில்லை என ஆளுநர் செய்திக் குறிப்பு மூலம் அறிவிப்பது பொருத்தமற்றது எனவும் உச்சநீதி மன்றத்தை அரசு அணுகலாம் எனவும் மக்க ளவை செயலகத்தின் முன்னாள் பொதுச் செய லாளர் பி.டி.ஆச்சாரி தெரிவித்தார்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, ஆளுநருக்கு அரசால் அனுப்பப்படுகிறது. அதன்மீதான நடவடிக்கை குறித்து அரசு ஆளு நர் தெரிவிக்க வேண்டும். சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் ஒப்பு தல் அளிக்க வேண்டும். ஆனால் அனுமதி வழங்காமல் சிறிது காலம் அங்கு கிடப்பில் போடப்பட்டது.
உச்சநீதிமன்றம் தலையிடும் என்று தெரிந்த தும், மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டன. குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் இந்த மசோதா, மத்திய உள் துறை அமைச்சக அதிகாரிகளால் கையாளப்படு கிறது. இறுதியில் மத்திய அரசுதான் முடிவு எடுக்கும். இது ஒரு வகையில் கூட்டாட்சி முறைக்கு எதிரானது.
குடியரசுத் தலைவரும் அரசமைப்புச் சட் டத்தின் உள்ளார்ந்தவர். எனவே, ஒரு உத்தரவை அனுப்பும்போது அது காரணத்துடன் இருக்க வேண்டும். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என் பதை அறிய மாநில அரசுக்கு உரிமை உள் ளது. இதைக் காரணம் காட்டி அரசு உச்சநீதி மன்றத்தை அணுகலாம் என்று தெரிவித் துள்ளார்.