திருவனந்தபுரம், பிப்.1- தவறு செய்திருந்தால் நிம்மதி இல்லாமல் போகும். பொய்யான குற்றச்சாட்டுகளைக் கேட்டாலும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே தூங்கலாம். அது இந்தக் கைகள் சுத்தமாக இருப்பதால்தான் என்பதை தலையை உயர்த்தி சொல்வேன், இந்த கைகள் சுத்தமானவை’’... என்று, தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் எதிர்க்கட்சிகள் சுமத்தியுள்ள பொய் குற்றச்சாட்டுகளுக்கு, முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்து சட்டமன்றத்தில் பேசினார்.
முன்பு எனது மனைவி பற்றி கூறப்பட்டது. இப்போது மகள் பற்றி. எனது மனைவி பணி யில் இருந்து ஓய்வு பெற்றபோது கிடைத்த தொகை பெங்களூருவில் நிறுவனம் தொ டங்குவதற்காக அவரது மகளுக்கு வழங்கப் பட்டது. குறைந்த பட்சம் அவர்களில் சிலர் முன்பு சொன்னதை மறந்திருக்க மாட்டார்கள். சிங்கப்பூர் பயணம், டெக்னி காலியா, கமலா இன்டர்நேஷனல், அரண் மனை போன்ற வீடு என எந்த இடத்தைப் பார்த்தாலும் அதோடு இணைத்து பேசப் பட்டது.
பா.ஜ.க.வின் இசைக்கு பக்கவாத்தியம்
ஒன்றிய அரசு கேரளத்தை நிதித் தடை கள் என்ற வகையில் நெருக்குகிறது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுக வும், பொதுவெளியில் குரல் எழுப்பவும் அரசு தள்ளப்பட்டுள்ளது. கேரளத்தில் நிதி நெருக்க டியை ஏற்படுத்தும் அரசியல் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இவ்விசயத்தில் காங்கிரஸ் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தத் தயங்குவது கூட்டாட்சி முறை வாழ்வதற்கான போராட்டத்தில் இருந்து தப்பிப்பதுதான். இதுகுறித்து காங்கி ரஸிடமும், எதிர்க்கட்சித் தலைவரிடமும் கேட்டால், ‘அரசின் தவறான நிர்வாகமும், வீண் விரயமும் தான் பணத்தட்டுப்பாட்டுக்கு காரணம்’ என பிரச்சாரம் செய்கின்றனர்.
இந்த அரசாங்கத்தை எப்படி பலவீனப் படுத்துவது என்று எதிர்க்கட்சிகள் சிந்திக் கின்றன. எல்லாவற்றிலும் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்று வாதிடுவ தில்லை. ஆனால், குற்றச்சாட்டுகளையும், பொய்களையும் கூறி யாரை திருப்திப்படுத்து கிறார்கள் என்று முதல்வர் கேள்வி எழுப்பி னார்.