states

img

அரசமைப்பு விழுமியங்களைத் தகர்க்கும் பாஜகவின் முயற்சிகளுக்கு பலத்த அடி கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம், ஜுன் 5- மக்களவைத் தேர்தல் முடிவு, ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு விழுமியங்களைத் தகர்க்கும் பாஜகவின் முயற்சிகளுக்கு பலத்த  அடியாகும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

பாஜக பெரும்பான்மையை இழந்த இந்த தேர்தல் முடிவு, ஊடகங்கள், நிர்வாகம், மத்திய  அமைப்புகள், பணமோசடி என பெரும் பகுதி யினர் செய்த அனைத்துப் பிரச்சாரங்களையும் மக்கள் நிராகரித்ததையே காட்டுகிறது. வகுப்புவாதத்தையும் மதவெறியையும் கிளப்பி விட்டு பாதுகாப்பாக முன்னேறலாம் என்ற  மாயையை இந்திய மக்கள் உடைத்தெறிந்துள் ளனர் எனவும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள் ளார்.

கேரளத்தில் எல்டிஎப் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஏறத்தாழ 2019ஆம்  ஆண்டின் அதே முடிவுதான் கிடைத்தது. மக்க ளின் ஆணையை ஏற்று, ஆழமாக ஆராய்ந்து,  தேவையான திருத்தங்கள் செய்வதன் மூலம் மாநில அரசின் பணிகள் சிறப்பாக செயல் படுத்தப்படும். குறைபாடுகள் கண்டறியப் பட்டு சரி செய்யப்படும். எமது  அரசாங்கத்திற்கு எதிரான திட்டமிட்ட  பிரச்சாரங்களை  எதிர்ப்ப தற்கும் மக்கள் மத்தியில்  பரப்பப்பட்டுள்ள தவறான எண்ணங்களை அகற்றுவதற்குமான முயற்சிகள் வலுப்படுத்தப்படும்.

திருச்சூர் பாஜக வெற்றி  தீவிரமாகக் கருதப்படும்

திருச்சூர் தொகுதியில் பாஜகவின் வெற்றி தீவிரமாக கருதப்படுகிறது. ஜனநாயகத்து க்கும், மதச்சார்பின்மைக்கும் முன்மாதிரியாக விளங்கும் நம் மாநிலத்திலேயே (கேரளத்தில்) முதன்முறையாக மக்களவைத் தொகுதியில் பாஜக, வெற்றி பெற்றுள்ளது என்பது விமர்சன ரீதியாக மதிப்பிடப்பட வேண்டிய விசயம். அதற்கு அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜன நாயக நம்பிக்கையாளர்களும் தயாராக இருக்க வேண்டும். அந்தப் பொறுப்பை நிறை வேற்றி, மதச்சார்பற்ற விழுமியங்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு இடது ஜனநாயக முன்னணி முன்னேறும். 

மக்களை ஒன்றிணைத்து, நாட்டின் நன்மைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் உறுதியான நிலைப்பாடுகளுடன் முன்னோக்கிச் செல்வோம். அரசாங்கத்தின் தரப்பில் இருந்து விரிவான மற்றும் நுண்ணிய அளவிலான நடவடிக்கைகள் இருக்கும். 

இடது ஜனநாயக முன்னணிக்காக உழைத்த மக்களுக்கு நன்றி. ஜனநாயகம் காக்கப்பட  வேண்டும் என்ற உறுதியான நிலைபாட்டில் பாஜகவுக்கு எதிராக வாக்களித்த நாடு முழு வதும் உள்ள வாக்காளர்களுக்கு வணக்கம் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.