states

img

குடியுரிமையை அர்ச்சகர்கள் தான் தீர்மானிக்க வேண்டுமா?

மோடி அரசுக்கு கேரள முதல்வர்  பினராயி விஜயன் கேள்வி திருவனந்தபுரம், மார்ச் 29- இந்நாட்டு மக்களின் குடியுரிமையை அர்ச்சகர்கள்தான் தீர்மானிக்க வேண்டுமா? என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பி யுள்ளார்.

குடியுரிமைக்கு மதத்தை அளவுகோலாக ஏற்க முடியாது என்றும் அது அரசமைப்பு விழு மியங்களை அப்பட்டமாக மீறுவதாகும் எனவும் அவர் கூறினார். திருவனந்தபுரத்தில் நடந்த குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் உரை யாற்றிய அவர் மேலும் கூறியதாவது: நமது நாடு மதவாத நாடாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் நம் நாட்டில் முன்பும் இருந்தனர். ஆனாலும், நமது நாடு மதச்சார்பற்ற நாடாகவே இருந்தது. நாகரீக நாடுகள் மத அரசை அங்கீகரிப்பதில்லை.
அதனால்தான் இந்தியாவின் குடியுரிமைச் சட்டம் குறித்து இத்தகைய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. கேரளத்தின் மதச்சார்பின்மையை குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்கவில்லை. ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி  நிரல் இங்கே செயல்படுத்தப்பட்டு, இப்போது  அவர்கள் அரசமைப்பை சிதைக்க முயற்சிக்கின்ற னர். அரசியல் சட்ட அமைப்புகளின் சுதந்திரத்தை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நீதித்துறையும் இதில் ஈடுபட்டுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்பு கள் பயன்படுத்தப்படுகின்றன. மாநிலத்தின் முதல்வர்களே சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆர்எஸ்எஸ் என்ன நினைக்கிறதோ அதைச் செய்வோம் என செயல்படுகிறது ஒன்றிய அரசு.  

இந்தியா கண்டிராத மிகப் பெரிய ஊழல் தேர்தல் பத்திரம். தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட நீதிமன்றம் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டி யிருந்தது. உலகில் எங்கும் அகதிகள் மதத்தின் அடிப்படை யில் பாகுபாடு காட்டப்படவில்லை. தற்போது குடி யுரிமையை 6 பிரிவினருக்கு மட்டுமே கட்டுப் படுத்தும் வகையில் ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்த ஆறு பிரிவுகளிலும் முஸ்லிம்கள் இல்லை. முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கவே இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

ஒரு நாளிதழ் ஹெல்ப்லைன் மூலம் கேட்டபோது, இந்து மதகுருமார்களிடம் குடியுரிமைச் சான்றிதழைப் பெற வேண்டும் என்று பதில் கிடைத்துள்ளது. இந்நாட்டு மக்களின் குடியுரிமையை அர்ச்ச கர்கள்தான் தீர்மானிக்க வேண்டுமா? இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.