திருவனந்தபுரம், ஏப்.27- விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில், துறைமுகத்தின் நுழைவாயில் வளாகம் திறக்கப்பட்டது. பினராயி விஜயன் தலைமையிலான இரண்டாவது அரசின் 2ஆம் ஆண்டு நிறை வையொட்டி, 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட துறைமுக வாயில் வளாகத்தை நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் திறந்து வைத்தார். அமைச்சர் அகமது தேவர்கோவில் தலைமை வகித்தார். வாயில் வளாகத்தில் டிஜிட்டல் ஸ்கேனர்கள், அதிநவீன கேமராக்கள் மற்றும் சைன் பிரிட்ஜ் கண்ட்ரோல் போன்ற மேம்பட்ட அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. சரக்குகளின் சட்டப்பூர்வ ஸ்கேனிங்கும் வாயில் வளாகம் வழியாக நடைபெறும். வளாகத்துடன், கட்டி முடிக்கப்பட்ட பாதுகாப்பு கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது. பாதுகாப்பு கட்டிடம் சிசிடிவி மானிட்டர்கள் மற்றும் ஸ்பிளிட் ஸ்கிரீன் பாகங்கள் கொண்ட மத்திய பாதுகாப்பு கண்காணிப்பு பேனல்களைக் கொண்டுள் ளது. நிகழ்ச்சியில் விஐஎஸ்எல் நிர்வாக இயக்குநர் அடீலா அப்துல்லா, ஏவிபிபிஎல் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் குமார் ஆகியோர் பேசினர்.