states

img

நடிகை பாலியல் வழக்கு : திலீப்புக்கு ஆதரவாக முன்னாள் டிஜிபி ஆர் ஸ்ரீலேகா

திருவனந்தபுரம், ஜுலை 11- கேரளத்தில் நடிகை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் திலீப்புக்கு ஆதரவாக முன்னாள் சிறைத்துறை டிஜிபி ஸ்ரீலேகா பேசியதற்கு நடிகையின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து நடிகையின் சகோதரர் முக நூலில் எழுதியுள்ளார்.  அதில், கூறப்பட்டுள்ளதாவது:  தற்கொலைகளில் பல வகைகள் உள்ளன. அது உடல் ரீதியான தற்கொலை என்றால், அதோடு முடிந்து விடும். தற்கொலை செய்துகொள்பவர் அதைப்பற்றி தெரிந்துகொள்ளவோ, சிந்திக்கவோ தேவையில்லை. மாறாக, சொல்லப்பட்ட வார்த்தைகளின்படி வாழ்ந்துகொண்டே மரணத்தை அனு பவிப்பது மிகவும் வேதனையானது. இங்கு நீதிப் பணியாளர்களாக வரு பவர்களின் நிலையை நினைக்கும் போது, அவர்களுக்காக பரிதாபப்படு கிறேன். காலங்காலமாக கட்டி யெழுப்பப்பட்ட ஆளுமை ஒரு நொடியில் அழிக்கப்பட்டு மீண்டும்  கட்டியெழுப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்பதை அவர்கள் உணர வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.