ஒன்றாம் வகுப்பில் படிக்கும் ஆஷிபாவுக்கு ஓணம் என்றாலே ஊர் சுற்றுவதில்தான் கொண்டாட்டமே. இதற்காகவே வழக்குரைஞரான அப்பாவிடம் கேட்டு ஆண்டு முழுவதும் பணத்தை சேமித்து சுற்றுலா செல்லத் தயாராகி விடுவார்.
இம்முறை தான் சேமித்த ரூ.10 ஆயிரத்தை தந்தையிடம் கொடுத்து சுற்றுலாவை உறுதி செய்திருந்தார். இந்நிலையில் வயநாடு நிலச்சரிவுச் செய்தி கள் அவரை வெகுவாக பாதித்தது. தந்தை யிடம், பப்பா நமக்கு டூர் வேண்டாம், பைசா அப்பிகளுக்கு (சிறுவர்கள்) கொடுக்காம் என மலையாளத்தில் ஆஷிபா கூறிய போது நெகிழ்ந்து போனார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவரான வி.ரெதீஷ், ஷைனி தம்பதியின் ஒரே மகள்தான் ஆஷிபா. மகளின் விருப்பத்தை உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமியை அழைத்து தெரிவித்துள் ளார். ஆஷிபாவின் வீட்டுக்கு சென்ற அவர் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.