states

img

வயநாட்டிற்கு விவசாயிகள் சங்கம் ரூ.1 கோடி நிதியுதவி

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்காக அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) மற்றும் கேரள விவசாயிகள் சங்கம் இணைந்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ரூ.1 கோடி காசோலையை வழங்கினர். திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் அசோக் தாவ்லே, பொதுச்செயலாளர் விஜூ கிருஷ்ணன், துணைத்தலைவர் இ.பி.ஜெயராஜன், நிதிச் செயலாளர் பி.கிருஷ்ணபிரசாத், கேரள விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.விஜயகுமார், பொதுச்செயலாளர் வல்சன் பனோலி உள்ளிட்டோர் பினராயி விஜயனிடம் காசோலையை வழங்கினர்.