காலநிலையில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள் கேரளாவைத் தொடர்ந்து அச்சத்தின் நிழலில் வைத்திருக்கின்றன. புத்துமலை, கூட்டிகால், கவலப்பாறை, பெட்டிமுடி, கொக்கையாறு முதல் முண்டகை வரை நீண்ட நிலச்சரிவுகளையும், அடுத்தடுத்த துயர சம்பவங்களையும் கேரளா மீண்டும் கண்டு வரும் போது, ஒவ்வொரு இயற்கைப் பேரிடருக்குப் பிறகும் நாம் தயாராகும் ஏற்பாடுகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே என்பது மீண்டும் மீண்டும் தெளிவாகிறது.
நேற்று வரை இருந்த ஒரு பகுதி இன்று இயற்கை சீற்றத்தில் கல்லும், மண்ணும், சேறும் அன்றி வேறில்லை. பேரழிவின் அளவு தற்போதைய காட்சிகளிலிருந்து தெளிவாகும். கிராமங்கள் சேறும் சகதியுமான ஆறுகளாய் மாறிய கட்சி. உயிருள்ள மற்றும் இறந்த மனிதர்களுடன் மண் மற்றும் பாறைகளுடன் சேர்த்து ஆர்ப்பரித்து ஒழுகும் ஆறுகள். இரண்டு கிராமங்களின் உண்மைக்காட்சி தான் இது. ஒரு இரவு விடிந்த போது, இங்கிருந்து அலறல்களும் அழுகைகளும் மட்டுமே கேட்க முடிந்தது.
கேரள வரலாற்றில்...
கேரள வரலாற்றில் மிகப்பெரிய பேரிடராக வயநாட்டின் சூரல்மலை மற்றும் முண்டகையும் மாறியுள்ளன. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு, சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாலியாறு ஆற்றில் இறந்த உடல்கள் மற்றும் வீடுகள் அடித்து வரப்படுவதை நிலம்பூர் போத்துக்கல்லு பகுதி மக்கள் கண்டு அதிர்ந்தனர்.
அளவுக்கு மீறிய மழை பெய்தால் கேர ளத்தில் நிலச்சரிவும், மண் சரிவும் நிரந்தர நிகழ்வாக இருக்கும். மக்கள் அச்சம் மற்றும் பதற்றத்தின் உச்சத்தில் உள்ளனர். மலையடி வாரத்தில் இருக்கும் மனித உயிர்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. 2024 இல் கூட பதிலைக் கண்டுபிடிக்க நம்மால் முடியவில்லை.
கனமழை மட்டும்தான் காரணமா?
ஆகஸ்ட் 8, 2019 அன்று நடந்த, 17 பேரைப் பலிகொண்ட நிலச்சரிவு ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அருகில் உள்ள மேப்பாடியில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இம்முறை இயற்கையின் தாண்ட வத்தில் அவலம் அதிகம். கனமழையின் போது வயநாட்டில் பல இடங்களில் நிலச்சரிவு சகஜ மாக இருந்தாலும், இதுபோன்ற பேரழிவு எதிர்பாராதது.
2019இல் நடந்த வெள்ளத்திற்குப் பிறகு, கேரளாவில் இயற்கை பேரழிவு ஒரு தொடர்ச்சி யாக மாறி வருகிறது. கனமழை மட்டும் தான் இதற்கு காரணமா? இல்லை என்பது தான் விடை. அதிக மழை பெய்தால், சேமிப்பு கொள்ள ளவை விட அதிக நீர் மண்ணில் கசியும். நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பதால், மண்ணுக்கு அடியில் அழுத்தம் அதிகரிக்கிறது. இந்த அழுத்தத்தின் அடிப்படையில், நீர் சக்தியுடன் வெளியேறுகிறது. மேலும் தளர்வான பாறை யும் பூமியும் வெளியேறுகிறது.
மலையின் அடிப்பகுதியிலிருந்து சுரங்கப் பாதை போன்று கற்களும் மண்ணும் ஒழுகிப் போவதால், மேல் மலை அமர்ந்து திடீரென அடிவாரத்தில் விழுகிறது. தற்போதைய பேரிடர் பகுதிகள் அனைத்தும் முந்தைய ஆண்டுகளில் நிலச்சரிவைச் சந்தித்துள்ளன. அப்போது பூமி பிளவுபட்டிருக்கலாம். பின்னாளில் மழை பெய்யும்போது அப்படியே இருந்துவிட்டு கடைசி யில் கனமழை பெய்யும்போது மண் வடிந்திருக்கலாம். சுமார் 22 டிகிரி சாய்வான பகுதி களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. மண்ணை இடித்து நீக்குவதும் மற்றும் பாறை களை உடைப்பதும் நிலச்சரிவை ஏற்படுத்தும்.வயநாட்டின் மண் எத்தகையது?
வயநாட்டின் மண் எத்தகையது?
வயநாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இங்குள்ள மண் உறிஞ்சக்கூடியதை விட அதிகமான தண்ணீரைப் பெறுகிறது. வயநாடு, முண்டகை மற்றும் சூரல்மலை போன்ற இடங்களில் “கருப்பு லேட்டரேட்” எனப்படும் மண்னினம் தான் காணப்படுகின்றன. இது ஒரு வகை மண்ணாகும், இது மிகவும் கடினமானது அல்ல, மேலும் தண்ணீரை விரைவாக உறிஞ்சி விரைவாக வடிகட்டுகிறது. தொடர்ந்து கனமழை பெய்யும் போது, மண்ணால் அனைத்து நீரையும் நிலத்தில் உறிஞ்ச முடியாது.
மக்கள் வாழக் கூடாத பகுதி
ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே, இப்பகுதி மக்கள் வசிக்கத் தகுதியற்ற பகுதியா கவும், மண்சரிவு மற்றும் நிலச்சரிவுகளுக்கு உள்ளாகக்கூடியதாகவும் கருதப்பட்டது. பழங்காலத்தில் இங்கு யாரும் வசிக்கவில்லை. சமீப வருடங்களாக மக்கள், இடம்பெயர்வின் ஒரு பகுதியாக வருகிறார்கள். காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்ட பகுதி இது.
ஒவ்வொரு இடத்தின் தன்மைக்கேற்ப நிலச்சரிவுகள் கணக்கிடப்படுகின்றன. தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தால், நிலச்சரிவு அபாயத்தை எதிர்பார்க்க வேண்டும். மலைச் சரிவுகள், மலையடி வாரங்கள் மற்றும் மலை உச்சிகளில் வசிப்ப வர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
ஓரிரு நாட்களில் 10 செ.மீ.க்கு மேல் மழை பெய்தால், மக்களை வெளியேற்ற வேண்டியது அவசியம். முக்கியமாக நீர்வழிகளை சுத்தம் செய்யவேண்டும். இல்லையேல் மலை உச்சியில் இருந்து மழைநீர் வெளியேற முடியாமல் பாறைகள் பலமாகத் தள்ளப்பட்டு உடைக்கப்படுகின்றன.
மிக அதிக கனமழை
கடந்த 24 மணி நேரத்தில் வயநாடு புதுமலையில் 372 மிமீ மழை பெய்துள்ளது. நமது நிலப்பரப்பு ஒரே நாளில் இவ்வளவு மழை பெய்யும் அளவிற்கு ஏற்றதாக இல்லை. ஜூலை மாதத்தில் பெய்ய வேண்டிய மழை அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக பெய்துள்ளது.
வயநாட்டில் 23 பஞ்சாயத்துகளும் மூன்று நகராட்சிகளும் உள்ளன. இதில் 12க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் சிவப்பு மண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆய்வில் இயற்கைப் பேரிடர் பகுதிகள் கண்டறியப்பட்டன. தற்போது நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மேப்பாடி ஊராட்சியும் இதில் அடங்கும்.
தொழில்நுட்பம் இல்லை
கேரளா இதுவரை கண்டிராத மிகப்பெரிய நிலச்சரிவு இப்போது சூரல்மலையில் நிகழ்ந்தது தான் என்று அமைச்சர் ஓ.ஆர்.கேலு கூறுகிறார். சம்பவ இடத்திற்குச் சென்ற அமைச்சர், இதற்கு முன்னரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள போதிலும், கேரளாவில் இது போன்ற பயங்கரமான துயரம் ஏற்பட்டதில்லை என தெரிவித்தார். நிலச்சரிவைக் கணிக்கும் தொழில்நுட்பத்தைப் பல வெளிநாடுகள் உருவாக்கியுள்ளன. ஆனால், நம் மாநிலமோ, நாடோ ஒன்றும் உருவாக்கவில்லை. மழை பெய்தால் எந்நேரமும் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் இதுபோன்ற வளர்ச்சி ஏற்படவில்லை. பேரிடர் மீட்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது பேரிடர் கணிப்பு என்பது இதன் பொருள்.
2019 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, பல மாத முயற்சிகளுக்குப் பிறகும் பல இறந்த உடல்களை எங்களால் மீட்க முடியவில்லை. உடன் இருந்தவர்கள் நொடிப்பொழுதில் காணாமல் போகும் போது, தங்களின் அன்புக்குரியவர்கள் உயிருடன் இல்லாவிட்டாலும் அவர்களின் இறந்த உடலை கடைசியாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற வேண்டும்.
நிலச்சரிவு ஏற்பட்ட மேப்பாடி ஊராட்சிக்கு அருகில் உள்ள மேப்பாடி ஊராட்சி மன்றத் தலை வர் கூறுகையில், “சுமார் 150 வீடுகள் இருந்த பகுதியில் இன்று ஒன்று கூட மிஞ்சவில்லை” என்கிறார் அதிர்ச்சியுடன்.
“கனமழை பெய்த இரவில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை. தூக்கத்திலிருந்து அதிர்ந்து எழுந்தபோது, பலர் கழுத்து வரை சேற்றிலிருந்தனர். நிலச்சரிவு பற்றி மக்களுக்கு நள்ளிரவு 2:30 மணிக்கு தெரிய ஆரம்பித்தது. கனமழை மற்றும் இருள் காரணமாக, என்ன நடந்தது என்றோ, பேரழிவின் அளவையோ புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லா இடங்களிலும் சேறும் தண்ணீரும் மட்டுமே இருந்தது” என்று துயரத்தை விளக்குகிறார்கள் மக்கள்.
“யாராவது ஓடி வாருங்களே.. எங்களின் வீடுகள் அனைத்தும் போய்விட்டது கூட இருந்த வர்களை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. சேற்றில் மாட்டிக்கொண்டார்கள். அவர்கள் உயிரோடு இருக்காங்களான்னு தெரிய வில்லை. மண்ணுக்குள்ள மாட்டிக்கொண்டா ர்கள். வாயெல்லாம் சேறு, எப்படியாவது அவர் களைக் காப்பாற்ற வேண்டும்.”
இனி யாரும் இப்படி அழக்கூடாது. ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றது. மீட்பு, நிவாரணப் பணிகளில் அனைவரும் களமிறங்கியுள்ளனர். தொடர் பேரிடர்களைச் சமாளித்து வரும் இடதுஜனநாயக முன்னணி அரசும், அயராது களத்தில் நிற்கிறது.
தேசாபிமானியில் இருந்து...
சிபிஎம் அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த இரங்கல்!
கேரள மாநிலம் வயநாட்டில் அடுத்தடு த்து ஏற்பட்ட நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கேரள மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலச் சரிவுகளால் பலர் இறந்து ள்ளனர். கடைசியாக கிடைத்த தகவல் களின்படி 63-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். நூற்றுக்கும் மேற்பட் டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பலத்த சேதம் மற்றும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ள தாகவும் கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கேரள மாநில அரசு ஏற்கெனவே நிபுணர்கள் மற்றும் மக்கள் உதவியுடன் தீவிர மீட்புப் பணி களைத் தொடங்கியுள்ளது. ஒன்றிய அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு, நிவா ரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு மாநில அரசுடன் இணைந்து அனைத்து உத விகளையும் வழங்கும் என நம்புகிறோம்.