திருவனந்தபுரம்:
அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியே செல்வதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். கேரளத்தில் எதையும் வீட்டிற்கே கொண்டு வந்து ஒப்படைக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எப்போதும் தயாராக உள்ளனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உதவி மையம் (ஹெல்ப் டெஸ்க்) அமைத்து அத்தியாவசியப் பொருட்களையும் இலவசமாக வீடுகளுக்கே விநியோகிக்க களமிறங்கியுள்ளது. ஊரடங்கில் வீடுகளில் முடங்கி இருக்கும் மக்கள் செய்ய வேண்டியது, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அப்பகுதியில் உள்ள வாலிபர் சங்க பகுதிக் குழுக்களின் அழைப்பு மையத்தை அழைப்பது மட்டும்தான். எப்போதும் மக்கள் நலனில் அர்ப்பணிப்போடு களமாடும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோவிட் இரண்டாவது அலையை கடக்கவும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறது.