states

img

சிபிஎம்-மில் குடும்பம் குடும்பமாக இணைந்த காலடி பகுதி பாஜக-வினர்..... பூத் கமிட்டி தலைவர்களும் விலகினர்

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம், காலடி யில் ஏராளமானோர் பாஜக-விலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளனர். குடும்பம் குடும்பமாக இணைந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காலடிவார்டில் போட்டியிட்டவரும், பாஜக காலடி பகுதி துணைத்தலைவருமான பி. அனில்குமார் தலைமையில் பல குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தன. வார்டு தலைவர் மனோஜ் மற்றும் பூத் கமிட்டி தலைவர்களும் இணைந்தனர்.  இதையொட்டி வரவேற்பு நிகழ்ச்சிநடைபெற்றது.  சிபிஎம் மாநிலக்குழு  உறுப்பினர் வி. சிவன்குட்டி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். ஷியாம்மோகன் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் கரமண ஹரி,  வழக்கறிஞர் பி. ராமச்சந்தி ரன்நாயர், எஸ். புஷ்பலதா மற்றும் சாலா பகுதி செயலாளர் எஸ்.ஏ. சுந்தர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர்கள் ஷிஜுகான், சி. கோபி, ஆர்.அஜித் குமார் ஆகியோர் உரையாற்றினர்.

;