ஆளுநர் ஆரிப் முகமது கானின் நடத்தை முதிர்ச்சியற்றது. ஆளுநருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தற்போது அவர் ஒட்டுமொத்த கேரளத்துக்கும் சவால் விடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள் ளார் என செய்தியாளர் சந்திப்பில் முதல் வர் பினராயி விஜயன் தெரிவித்தார். பதவியில் இருப்பவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது இயல்பு. இது போன்ற போராட்டங்கள் நடக்கும் போது அதிகாரப் பதவிகளில் இருப்பவர் களின் அணுகுமுறை என்ன என்பது தான் பிரச்சனை. முதல்வர் போனால் என்ன நடக்கும் என்று ஆளுநர் கேட்கி றார்.
எனக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. ஆனால் இன்று வரை ஆளு நர் செய்ததை யாரும் செய்யவில்லை. ஆளுநர் இப்போது வழக்கமான பாது காப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகச் செய்துள்ளார். போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்துவது காவல்துறையின் பொறுப்பு. ஆனால் ஆளுநர் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வரு கிறார்.
எப்.ஐ.ஆர் பார்க்காமல் போக மாட்டேன் என்று ஒரு ஆளுநர் சொல் வது இதுவே முதல் முறை. தற்போது சிஆர்பிஎப் வசம் பாது காப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு தலைவருக்கு சிறந்த பாதுகாப்பை அரசு வழங்கியது. ஆளுநரின் பாது காப்பு ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பது விசித்திரமாகத் தெரி கிறது. கேரளாவில் உள்ள சில ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு மத்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அந்த பட்டியலில் ஆளுநரும் நுழைந்துள்ளார். அவர் விரும்பியபடி சிஆர்பிஎப் செயல்பட முடியுமா? சட்டம் அதிகாரத்திற்கு மேலானது. அதை புரிந்து கொள்ளா ததுதான் ஆளுநரின் அணுகுமுறை. இதுபோன்ற விசயங்களில் விவேகம் காட்டுவது அவசியம். உயர் பதவியில் இருப்பவர்கள் காட்ட வேண்டிய பக்கு வம் ஆளுநரிடம் இல்லை.
இப்படிப்பட்ட நபரை கேரளம் இது வரை பார்த்ததில்லை. இது அவமானகர மானது. இது அரசமைப்பையும் அவ மதிக்கிறது. கொள்கை அறிவிப்பு உரை யை படிக்க நேரமில்லாத ஆளுநர், ஒரு மணி நேரம் சாலையில் மறியலில் ஈடு பட்டார். ஒன்றிய அரசு முடிவெடுக்கும் வரை ஆளுநர் அதைத் தொடர்வார். எதிர்க்கட்சித் தலைவரும், ஆளுநரும் இதைத்தான் சொல்கிறார்கள். சட்டம் எல்லாவற்றிற்கும் மேலானது என்பதை ஆளுநர் உட்பட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.