பாலக்காடு: கேரளத்தில் 10 மாதங் களில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் தொ ழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளது என அனைத்து சந்தேகங்களையும் போக்கும் புள்ளி விவரங்களுடன் முதல் வர் பினராயி விஜயன் விளக்க மளித்தார். சாலிசேரி அன்சாரி மாநாட்டு மையத் தில் மாநில உள்ளாட்சி தினத்தை அவர் தொடங்கி வைத்தார். அப்போது முதல்வர் பேசுகையில், ‘‘ஆண்டுக்கு ஒரு லட்சம் தொழில் நிறுவனங்களை பற்றி யோசித்த ஆரம்ப கட்டத்தில், குறுகிய காலத்தில் அது சாத்தியமாகுமா என்ற சந்தேகம் சிலருக்கு இருந்தது. ஆனால் எட்டு மாதங்களில் இலக்கு எட்டப்பட்டது. 10 மாதங்களில் 1.32 லட்சத்துக்கும் அதிக மான தொழில் நிறுவனங்கள் தொடங் கப்பட்டு, எட்டாயிரம் கோடி முதலீடு திரட்டப்பட்டு, 2.8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தொடக்க நிலை (ஸ்டார்ட் அப்) தொழில் துறையிலும் பெரிய தலையீடு செய்யப்பட்டது. ஸ்டார்ட் அப் இகோசி ஸ்டம் அறிக்கையின்படி, திறன் மதிப் பீட்டில் கேரளா ஆசியாவில் முதலிடத் திலும், உலகில் நான்காவது இடத்திலும் உள்ளது. ஆறு ஆண்டுகளில், ஸ்டார்ட் அப் துறையில் ரூ.836 கோடி பண்ட் ஆப் பண்டும் ரூ.4,561 கோடி வெஞ்சர் கேப்பிட்டல் பண்டும் கிடைக்கப்பெற் றன. சுமார் 4,000 ஸ்டார்ட் அப்கள் மற்றும் 40,000 வேலை வாய்ப்புகள் உரு வாக்கப்பட்டுள்ளன. தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துள் ளது. முயற்சிகளில் முன்னுக்கு வருப வர்கள் சோர்வடைந்து திரும்பிச் செல்லும் சூழலை உருவாக்காதீர்கள்.
ஒவ்வொரு வட்டாரத்திற்கும் பொருத் தமான தொழில் கண்டறியப்பட வேண் டும். உள்ளூர் சமூகத்தின் மூலம் திற மையான நபர்களை கண்டறிவதுடன் தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும். ‘இண்டஸ்ட்ரி ஆன் கேம்பஸ்’ மற்றும் ‘யங் இன்னோ வேட்டர்ஸ் புரோகிராம்’ மூலம் உயர் கல்வித் துறையில் பெரிய அளவி லான தலையீடுகளை அரசு செய்து வருகிறது. அறிவுப் பொருளாதார இயக்கத்தின் மூலம் திறன் மேம்பாட் டுத் திட்டங்களும் செயல்படுத்தப் படுகின்றன. வறுமை ஒழிப்புப் பணியை உள் ளாட்சி அமைப்புகள் மிக முக்கியத்து வத்துடன் மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் 64,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டது. தொழி லாளர் கவுன்சில் உள்ளாட்சி அமைப்பு கள் மூலம், முடிந்தவர்களுக்கு வேலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. காலம் மாறும்போது புதிய பொறுப் புகளை ஏற்று முன்னேற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் புதிய சமூக வடிவமைப்பு மையங்களாக மாற வேண்டும். ஒரே சொடுக்கில் தகவல் கிடைக்கும் இந்தக் காலத்தில் ஊழல் என்பது பணம் வாங்குவது மட்டுமல்ல. சேவைகளை தாமதப்படுத்துவதும், வரவேண்டியதை மறுப்பதும் ஊழல் தான்’’ என்றார்.