தியாகி புஷ்பன் உருக்கம்
கண்ணூர், அக்.3- ‘இனியொருமுறை அன்புத் தோழர் கோடியேரி பாலகிருண் ணனை பார்க்க முடியாதே’ என்று கூத்துப்பறம்பு துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்த தியாகி புஷ்பன் கூறியது சமூக ஊடகங்களில் வைரலானது. கட்சிக் கொடி போர்த்தப்பட்ட கோடியேரியின் உடலை ஊழி யர்கள் கொண்டு வந்தபோது தனக்கு ஆதரவாகவும் நிழலாகவும் இருந்த அன்புத் தோழரின் முகத்தை புஷ் பன் ஞாயிறன்று கடைசியாகப் பார்த்தார். ‘எனது எல்லா விஷ யங்களிலும் உதவிய தோழர், ஊரில் இருக்கும் போதும், இல் லாத போதும் அழைத்து பேசு வார். கேரளத்தில் இருக்கும் போது, பார்க்க வருவார்’ - என்ற புஷ்பன், கோடியேரியின் நினைவு களை நினைவு கூர்ந்தார்.