states

img

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சேமிப்பு ஆலை.... கேரளத்தின் ஆறுதல்.....

திருவனந்தபுரம்:
கோவிட் இரண்டாவது அலையில் பிற மாநிலங்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறும்போது, கேரளமக்கள் தொலைநோக்குடைய அரசாங்கத்தின் கீழ் வாழ்கின்றனர். அந்த அரசாங்கத்தின் கவனிப்புடன் தான் இந்த கடினமான காலகட்டத்தை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சேமிப்பு ஆலை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

ஆக்சிஜன் சேமிப்பு திறனை அதிகரிப்பதில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கையும் தொலைநோக்கு பார்வையும் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஆறுதலளிக்கிறது. கோவிட் பெருக்கத்தின் முதல் கட்டத்திற்கு முன்பே, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஆக்சிஜன் சேமிப்பு திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுவாக,ஒவ்வொரு ஆண்டும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால்,  அதற்கேற்ப வசதிகளின் அதிகரிப்புடன் ஆக்சிஜன் வழங்கல் இரட்டிப்பாகியது. வார்டுகளுக்கு திரவ ஆக்சிஜனை வழங்குவதற்கான ஒரு பகுதியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் தொட்டி நிறுவப்பட்டது.

முதல் தொட்டி 20 கிலோ லிட்டர் (இரண்டாயிரம் லிட்டர்) சேமிப்பு திறன் கொண்டதாக நிறுவப்பட்டது. புதிய தொட்டியை நிறுவுவதன் மூலம், 40 கிலோ லிட்டர்கள் (4,000 லிட்டர்) திரவ ஆக்சிஜனை சேமிக்க முடியும். வார்டுகளுக்கு ஆக்சிஜனை வழங்க புதிய குழாய் அமைப்பதும் நிறைவடைந்துள்ளது. கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், தற்போது ஒரு நாளைக்கு ஆறு கிலோ லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.மொத்தம் 450 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் குழாய் பதிக்கப்படலாம். தற்போது 260 க்கும் மேற்பட்ட ஐசியூ படுக்கைகளுக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக,வளிமண்டலத்திலிருந்து ஆக்சிஜனை சேமித்து பயன்படுத்தக்கூடிய ஆக்சிஜன் ஜெனரேட்டரை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தலா 1000 லிட்டர் ஆக்சிஜன்திறன் கொண்ட இரண்டு ஜெனரேட்டர்கள் நிறுவப்படும்.

;