வயநாடு, ஆக. 25 - வயநாட்டில் நேர்ந்துள்ள கோர விபத்து கேரளத்தை உலுக்கியுள்ளது. கேரள மாநிலம் வய நாட்டின் மானந்தவாடியில் உள்ள தோட்டமொன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் கண்ணோத் மலைக்கு அருகில் 25 மீட்டர் ஆழமான பள்ளத் தாக்கில் கவிழ்ந்து விபத்து க்குள்ளானது. இந்த கோர சம்பவத்தில் 9 பேர் உயிரி ழந்தனர். பலியானவர்களில் 8 பேர் பெண்கள் ஆவர். பலியானவர்கள் ராணி, சாந்தா, சின்னம்மா, லீலா, ஷாஜா பாபு, ராபியா, மாரி, வசந்தா ஆகியோரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்றொ ருவர் உடலை அடையாளம் காண இயலவில்லை. காயமடைந்த 2 பேரின் நிலைமை கவலைக்கிட மாக உள்ளது. காயமடைந்த வர்கள் மானந்தவாடி மருத்து வக் கல்லூரி மருத்துவமனை க்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். சம்பவம் குறித்து அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ள பினராயி விஜயன், வனத்துறை அமை ச்சர் ஏ.கே.சசீந்திரனை உடன டியாக அங்கு செல்லுமாறு பணித்துள்ளார்.