பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரவிருக்கும் மண்டல, மகரவிளக்கு சீசனில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படும் என கேரள தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் அறிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் கூறுகையில், “வரவிருக்கும் மண்டல, மகரவிளக்கு சீசனில் பக்தர்கள் பாது காப்பான முறையில் தரிசனம் செய்வதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்படும். கடந்த சீசனில் மண்டல, மகரவிளக்கு சீசனில் மட்டும் 52 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்த னர். எனவே இந்த வருடம் அதைவிட கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என்று கருதுகிறோம்.
ஆடி மாதத்தில் நடை திறந்தபோது கூட எதிர்பார்த்ததை விட அதிக அள வில் பக்தர்கள் வந்தனர். இதனால் பக்தர் களுக்கு தேவையான அடிப்படை வசதி கள் அனைத்தும் விரைந்து செய்யப் படும். முக்கியமாக 2024ஆம் ஆண்டின் மண்டல, மகரவிளக்கு சீசனில் ஆன்லைன் மூலம் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்படும்.
தற்போது நிலக்கல்லில் 8 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதி உள்ள நிலை யில், விரைவில் அதை 10 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. எருமேலியில் தற்போது 1100 வாகனங்கள் நிறுத்த வசதி உள்ள நிலை யில், அது 2000 ஆக உயர்த்தப்படும்” என அவர் அறிவித்தார்.
கேரள அரசின் இந்த உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக சபரிமலை பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.