states

img

வயநாட்டில் 2 நாட்களில் 570 மி.மீ., மழை கொட்டியதே நிலச்சரிவிற்கு காரணம்

வயநாடு வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள மாநில அரசு மூத்த விஞ்ஞானி ஜான் மத்தாய் தலைமையில், புவி அறிவியல் மையத் தின் நிபுணர்கள் குழு ஒன்றை அமைத் துள்ளது. இந்த நிபுணர் குழு நிலச்சரி வால் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை, புஞ்சரிமட்டம், அட்ட மலை, மேப்பாடி ஆகிய 5 இடங்களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், வெள்ளியன்று மேற்கொண்ட ஆய்வுக்கு பின்பு ஜான் மத்தாய் குழு வெளியிட்ட அறிக்கை யில்,”பேரிடர் பகுதியில் கணிக்க முடி யாத அளவில் 2 நாட்களில் 570 மி.மீ., மழை கொட்டியதே நிலச்சரிவிற்கு மிக முக்கிய காரணம் ஆகும். இந்த அதீத கனமழையால் மரங்களும், பாறைகளும் ஆற்றின் குறுகலான பகுதிகளில் விழுந்து, தற்காலிகமாக இரண்டு அல்லது மூன்று அணைகள், தடுப்பணைகள் உருவாகின. இந்த தடுப்பணைகளில் அதிக தண்ணீர் தேங்கி, அணைக்கரை வலுவிழந்து உடைந்தன. இந்த உடைப்பால் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் நிலநடுக்க மையத்தில் ஒரே ஒரு நிலச்சரிவுதான் ஏற்பட்டுள்ளது. இந்த ஒரு நிலச்சரிவு தான் 5 கிராமங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜான் மத்தாய் தலைமையிலான குழு கேரள அரசிடம் அடுத்த வாரம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பலி எண்ணிக்கை 443

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரி ழந்தோர் எண்ணிக்கை 443 ஆக உயர்ந்துள்ள நிலையில், காணாமல் போன 100க்கும் மேற்பட்டோர்களை தேடும் பணி 19 நாட்களைக் கடந்துள் ளது. புஞ்சரிமட்டம், முண்டக்கை, சூரல்மலை உயர்நிலைப்பள்ளி சாலை, கிராம அலுவலக சாலை, சூச்சிப் பாறை நீர்வீழ்ச்சியின் தாழ்வான பகுதி ஆகிய 6 பகுதிகளில் தொடர் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இரண்டு ஷிப்டுகளாக 404 பேர் மீட்புப் பணியில் உள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.