states

img

சாலை விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் பலி 6 பேர் படுகாயம் அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆறுதல்

கேரள மாநிலம் சங்கனாசேரி சந்தி ப்பு அருகே தேசிய நெடுஞ் சாலையில் டிசம்பர் 2 திங்க ளன்று இரவு 9:20 மணி யளவில் நடந்த சாலை விபத்தில் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி யில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்த 5 மாணவர்கள் உயிரிழந்தனர்.

பொது மக்கள் பார் வைக்காக வைக்கப்பட்டிருந்த உடல்கள் அருகே கதறி அழுத மாணவர்களின் பெற்றோருக்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆறுதல் கூறினார்.

கண்ணூ ரைச் சேர்ந்த முகமது அப்துல் ஜப்பார், லட்சத்தீவைச் சேர்ந்த பி.பி.முகமது இப்ரா ஹிம், பாலக்காட்டைச் சேர்ந்த ஸ்ரீதீப் வத்சன் ஆகியோரின் உடல்கள் செவ் வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டன. மலப்புரத்தைச் சேர்ந்த பி.தேவா னந்தன், ஆலப்புழாவைச் சேர்ந்த ஆயுஷ் ஷாஜி ஆகியோரின் உடல் தகனம் புதனன்று நடைபெற்றது.

படுகாயமடை ந்த 6 பேரில் ஒருவரது நிலை கவலைக்கிட மாகவும் 3 பேர் தீவிர சிகிச்சையிலும் உள்ளனர். 8 பேர் பயணம் செய்யத்தக்க வாகனத் தில் 11 மருத்துவ மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். மழையில் வேகமாக வந்த வாகனம் கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் மோதி இந்த பெரும் விபத்து ஏற்பட்டதாக போக்கு வரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.