திருவனந்தபுரம், பிப்.15- 15ஆவது கேரள சட்டப்பேரவை யின் 10ஆவது கூட்டத்தொடர் முடி வடைந்ததால், அவை கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 2023-24 வரவு செலவுத் திட்டத்திற் கான இறுதி ஒதுக்கீட்டுக் கோரிக்கை கள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு முடிந்த பிறகு நிதி ஒதுக்கீட்டு மசோதாக்களை பேரவை நிறைவேற்றியது. பேரவையின் நடப்பு கூட்டம் 11 நாட்கள் நடந்தது. மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத்தின் நிதி நெருக்கடி தொடர்பான அவசரத் தீர்மான நோட்டீஸ் மீதான விவாதத் துடன் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் போது 270 நட்சத்திர மிடப்பட்ட கேள்விகளுக்கும் 3,243 நட்சத்திரமிடப்படாத கேள்வி களுக்கும் பதில்கள் கிடைத்தன. இரண்டு தீர்மானங்களும் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார். 15ஆவது சட்டமன்றம் அதிக அவசரத் தீர்மான நோட்டீஸ்கள் விவாதிக்கப்பட்டதில் சாதனை படைத் துள்ளது.
ஏழு நோட்டீஸ்கள் சபையில் விவாதிக்கப்பட்டன. முதல் கேரள சட்டப்பேரவைக்கு பிறகு இதுவரை 37 அவசர தீர்மான நோட்டீஸ்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மூன்றில் ஒரு பகுதி 14 மற்றும் 15 சட்ட மன்றங்களில் உள்ளன.