states

img

விநாயகர் சிலை மூலம் வன்முறை குஜராத்தில் பதற்றம்

பாஜக ஆளும் குஜராத் மாநிலம் சூரத் நகரப்பகுதியில் உள் ளது சையத்புரா. இப்பகு தியில் முஸ்லிம் மக் கள் நிறைந்து காணப் படும் இடத்தில் விநா யகர் சதுர்த்தியை முன் னிட்டு அங்கு பந்தல் அமைக்கப்பட்டு, விநாயகர் சிலையை வைத்து சிலர் வழி பட்டனர். அப்பகுதி யை சேர்ந்த சிறுவர்கள் சிலர், விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த பந்தல் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இத னால் சிலை வைத்த தரப்பிற்கும், சிறு வர்களின் தரப்பிற்கும் மோதல் ஏற் பட்டது. இந்த மோதலில் சிலர் காயம டைந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு களை வீசியும்  மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறை தொ டர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 2 பிரிவினர் யாரென்ற தகவலை குஜராத் காவல்துறை மறைந்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சையத்புரா பகுதியில் முஸ்லிம் மக்கள் குறிப்பிடத்தக்க வகையில் வாழ்ந்து வருவதால்,  விநாயகர் சதுர் த்தியை முன்வைத்து அவர்கள் மீது  தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பை இந்துத்துவா கும்பல் பயன்படுத்திக் கொண்டதா? அதை காவல்துறை மறைக் கிறதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.