காந்திநகர், மே 11- குஜராத் பாஜகவுக்குள் நடந்து வரும் உட்கட்சிப் பூசல் காரணமாக கூட்டுறவுத் தேர்தலில் அமித்ஷாவின் கூட்டாளியைக் கட்சியினரே தோற்க டித்துள்ளார்கள்.
இஃப்கோ என்று அழைக்கப்படும் இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு லிமிடெட் கூட்டுறவு நிறுவனம் குஜராத் தில் உள்ளது. உரங்களை உற்பத்தி செய்வது மற்றும் சந்தைப்படுத்துவது ஆகிய பணிகளை இந்தக் கூட்டுறவு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இயக்குநரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜெயேஷ் ரடாடியா முன்கூட்டியே வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அமித்ஷாவின் ஆசியுடன் பிபின் படேல் என்பவர் களத்தில் இறங்கினார். மாநில பாஜக தலைமையும் பிபின் படேல்தான் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்றும், பாஜகவினர் அவருக்குதான் தனது வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும் அறிவித்தது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த அமித்ஷா, ரடாடியாவின் வீட்டிற்கே சென்று போட்டியில் இருந்து விலகு மாறு கேட்டுப் பார்த்தார். அதற் கெல்லாம் ரடாடியா அசையவில்லை. அவருக்கு ஆதரவாகக் கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்களில் பலர் களத்தில் இறங்கினார்கள்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ரடாடியாவுக்கு 113 வாக்குகளும், அமித் ஷாவின் கூட்டாளி பிபின் படேலுக்கு 64 வாக்குகளும் கிடைத்தன. மக்கள வைத் தேர்தலிலும் வேட்பாளர்கள் தேர்வில் உட்கட்சி மோதல் இருந்த தாகச் சொல்லப்பட்ட நிலையில், இந்தத் தோல்வி பெரும் அதிர்ச்சி அலை களை ஏற்படுத்தியிருக்கிறது.