states

img

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு!

கர்நாடக மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள லச்சயன் கிராமத்தில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சாத்விக் முஜகொண்டா என்ற 2 வயது குழந்தை, நேற்று மாலை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. குழந்தையின் அழுகை சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் குழந்தையின் பெற்றோருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு காவல்துறை, தீயணைப்புத் துறையினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஆகியோர் விரைந்தனர். 16 அடி ஆழத்தில் தலைகீழாகக் குழந்தை சிக்கியிருந்த நிலையில், பக்கவாட்டில் குழி தோண்டி சுமார் 18 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் குழந்தை மீட்டனர்.