states

img

தேசியக் கொடிக்குப் பதில் அனுமன் கொடி

காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் மத வெறுப்பு சம்பவங்கள் மூலம் குழப்  பத்தை ஏற்படுத்த பாஜக - மதச்சார் பற்ற ஜனதாதள கட்சிகள் தீவிரமாக  இறங்கியுள்ளன. இந்நிலையில், கர்நாடகாவின் தெற்கு  பகுதி மாவட்டமான மாண்டியாவின் கெரகோடு கிராமத்தில் குடியரசுத்  தினத்தன்று 108 அடி கொடிக்கம்பம்  வைக்க அக்கிராம பஞ்சாயத்திடம் அனு மதி கோரப்பட்டது.

தேசியக் கொடி  வைக்க தான் அனுமதி கேட்கிறார்கள்  என கிராம பஞ்சாயத்தும் அனுமதி வழங்  கிய நிலையில், குடியரசுத் தினமான ஜன வரி 26-ஆம் தேதி தேசியக் கொடிக்குப்  பதிலாக இந்துத்துவா கும்பல்அனுமன் கொடியை ஏற்றியுள்ளது. இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தகவலறிந்த கிராம நிர்வாக அதிகாரி மாவட்ட நிர்வா கத்திற்கு தகவல் தெரிவிக்க,

அதிகாரி கள் அனுமன் கொடியை அகற்றச் சென்ற  பொழுது இந்துத்துவா கும்பல் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியது.  இந்த போராட்டத்தில் பாஜக கூட்டணி யில் உள்ள தேவகவுடாவின் மதச்சார் பற்ற ஜனதா தளமும் பங்கேற்றது. இத னால், கெரகோடு கிராமத்தில் வன்முறை  பதற்றம் நிலவியது.

இதையடுத்து கெர கோடு கிராமத்தில் அதிரடி போலீசார் 144  தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது

மத வன்முறை போராட்டத்தில் தேவகவுடா கட்சி
கர்நாடக மாநிலத்தில் முக்கிய பிராந்  திய கட்சியாக இருப்பது தேவகவுடா வின் மதச்சார்பற்ற ஜனதாதளம். மதச்  சார்பற்ற ஜனதாதளம் என்ற பெயரை  வைத்துக்கொண்டு காங்கிரசை எதிர்ப்ப தாக கூறி சமீபத்தில் பாஜக கூட்டணியில் இணைந்தது. 3 மாதம் கூட ஆகாத நிலை யில், தங்களுக்கு செல்வாக்கு உள்ள பகு தியான மாண்டியா மாவட்டத்தின் கெர கோடு கிராமத்தில் அரங்கேற்றப்பட்ட மத  வன்முறை போராட்டத்தில் இந்துத்துவா - பாஜக குண்டர்களுடன் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளமும் களத்தில் இறங்கியுள்ளது.