கர்நாடகத்தில், சம்பளம் வழங்க தாமதிப்பதை கண்டித்தும், சுமார் 6,500 தொழிலாளர்களுக்கு இழப்பீடு அல்லது ஓய்வூதிய உதவிகள் ஏதும் வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்தும் அங்கன்வாடி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சிஐடியு தலைவர் எஸ்.வரலட்சுமி பேசுகையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல், அங்கன்வாடி தொழிலாளர்களுக்கான சம்பளத்தில் 1,000 ரூபாய் உயர்வு வழங்கப்படவில்லை என்றும், இழப்பீடு இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு, ரூ.1 லட்சம் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்றும் கோரினார்.