கர்நாடகாவில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து, ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவாவில் இருந்து ஐதராபாத்தை நோக்கி 29 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் உள்ள கமலாபுரா அருகே இன்று அதிகாலை பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிவேகமாக மோதியதால் பள்ளத்தில் விழுந்ததில் பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்து மளமளவென பரவ தொடங்கியது.
இந்த கோர விபத்தில் 7 பேர் பேருந்தில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 12 பயணிகள் கலபுர்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீயினால் முற்றிலும் எரிந்த பேருந்தில் இருந்து 22 பயணிகள் உயிர் தப்பியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.