ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளதாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி கடந்த ஜூன் 2-ஆம் தேதி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவின் பாலசோர் மாவட்டம், பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது விபத்துக்குள்ளானது.
அதன் பெட்டிகள், சரக்கு ரயில் மீது அருகிலிருந்த தண்டவாளங்களிலும் சிதறி விழுந்தன. அப்போது, அவ்வழியாக வந்த பெங்களூர்- ஹைரா விரைவு ரயில், கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பிற்பாடு ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 288 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு சில சடலங்கள் 2 முறை எண்ணப்பட்டதே காரணம், ஒடிசாவில் நடந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர் என ஒடிசா தலைமை செயலர் பிரதீர் ஜெனா அறிவித்திருந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக பலியானோர் எண்ணிக்கை 288 என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுவரை பலியானவர்களில் 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 83 பேரின் உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.