states

img

கொரோனா தடுப்பூசி... ஒடிசாவில் இளைஞர் பலி....

புவனேஸ்வர்
எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே, பல்வேறு சர்ச்சைகளை கையில் வைத்து கொண்டு நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

இதுவரை 20.39 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், நாட்டின் மேற்கு பகுதி மாநிலமான ஒடிஷாவின் நுவாபாடா மாவட்டம் சம்பால்பூரில் வசிக்கும் வீர் சுரேந்திர சாய் (27) என்ற நபர் கடந்த 23-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். மருத்துவமனை ஊழியரான சுரேந்திர சாய் திடிரென இன்று காலை இறந்துவிட்டார். இறப்பிற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் தடுப்பூசியால் சுரேந்திர சாய் இறக்கவில்லை என பெயரளவில் கூறப்பட்டுள்ளது.  

ஏற்கெனவே இம்மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 2 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

;