states

img

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்களிடையே மோதல் -பெட்ரோல் குண்டு வீச்சு 

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருவேறு விடுதி மாணவர்கள் இடையே நடந்த மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நேற்று இரவு ராஜாராம் விடுதி மற்றும் பிர்லா விடுதி மாணவர்களும் சாப்பிட சென்றே போது  மோதல் ஏற்பட்டது. அப்போது கல்வீச்சு மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. 
இதுகுறித்து துணை ஆணையர் அமித் குமார் கூறியதாவது கல்வீச்சில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
 

;