states

img

சொந்த கட்சி பெண் நிர்வாகியையே வல்லுறவு செய்த பாஜக எம்எல்ஏ... உத்தரகண்டில் அரங்கேறிய கொடுமை...

டேராடூன்:
நாடு முழுவதும் பாஜகவை சேர்ந்தவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்குவதும், கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.இதுதொடர்பாக, சட்டமன்ற உறுப்பினர்கள் துவங்கி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலர் மீதும் வழக்குகள் உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்புதான் குஜராத் மாநிலத்தில் சொகுசு விடுதியில் இளம்பெண்கள் சகிதம், மது விருந்து மற்றும்சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் சோலங்கி கைது செய்யப்பட்டார். இந்நிலையில்தான், சொந்தக் கட்சிபெண் நிர்வாகியையே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் உத்தரகண்ட் பாஜக எம்எல்ஏ ஒருவர் சிக்கியுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்டம் பஹத்ராபாத்தில் உள்ள ஜூவாலாபூரைச் சேர்ந்தவர் சுரேஷ் ரத்தோர். பாஜகஎம்எல்ஏவான இவர், பேகம்புரா கிராமத்தைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகி ஒருவரை, சில மாதங்களுக்கு முன்பு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளார். சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.எனினும் பாதிக்கப்பட்ட அந்த பாஜக பெண் நிர்வாகி, தற்போது துணிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் எம்எல்ஏ சுரேஷ் ரத்தோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

;