states

மதப்பற்று ஏற்படுத்தும் சங்கபரிவாரம்

நிகழ்வுக்கு தலைமை தாங்கி கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதிலிருந்து...

தென்னிந்தியாவை சேர்ந்த, 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகமானோர் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரித்துள்ளது. இதில் கணிசமானோர் சிறுபான்மை யினராக உள்ளனர். இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்ற அச்சம்  சிறுபான்மையினருக்கு அதிகரித்துள் ளது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படும் வகையில், வெறுப்பு அரசியல் மிக வேகமாக பரவுகிறது. ஒவ்வொருவரின் உள்ளத்திலும் வெறுப்பை பற்ற வைக்கிறார்கள். சிறுபான்மை குழந்தைகளை அடிக்க வைப்பது, ஹிஜாப்பை மறுப்பது, கல்வி உதவித் தொகைகளை நிறுத்துவது என ஒன்றிய ஆட்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நிழல் யுத்தம்

இந்தியாவில், தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு நிழல் யுத்தத்தை நடத்திக் கொண்டு இருக்கிற சூழல் உள்ளது. அதை குறைத்து மதிப்பிடக் கூடாது. சென்னிமலையில் நடந்த ஒரு சம்பவத்தை பயன்படுத்தி, சங்பரிவார் கும்பல் இந்து வெறியூட்டும் வேலையைச் செய்கிறது. சிறு பொறியை பயன் படுத்தி மோதலை உருவாக்கும் ஆபத்து தமிழகத்தை சூழ்ந்துள் ளது. பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கு மாவட்டங்களில் நடைபயணம் செல்லும் வழியெல்லாம் மதப்பதற்றத்தை உருவாக்க திட்டமிட்டு செயல்படுகின்றனர். ஒரேநாடு, ஒரே தேர்தல், 5 மாநில தேர்தலுக்கு பிறகு, மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும் என்கிறார்கள். கோவில் தொடர்பான வழக்குகளை எடுக்க மாட்டோம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறுகிற அளவிற்கு சங்பரிவாரம் வழக்குகளை போட்டுக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் மதவெறுப்போடு உள்ள ஒரே கட்சி பாஜக. ஆனால், சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்திய தமுஎகச, அதில் பங்கேற்றவர்கள் மீது பல வழக்குகளை உயர்நீதிமன்றத்தி லும், உச்சநீதிமன்றத்திலும்  பதிவு செய்துள்ளனர். மோடி ஒன்றை எதிர்த்தால் அதை வழக்காக மாற்றுகின்றனர். இந்து கோவில்களை அரசு ஆக்கிரமித்துள்ளது என்று பிரதமர் மோடி பேசியதும், மாநில அரசுகளுக்கு எதிராக வழக்குப் போடுகின்றனர்.

கோவில்களை கொள்ளையடிக்கவே

இந்தியாவில் அதிகமான கோவில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கோவில்கள் இருப்பதால்தான், கோவில்களும், அவற்றின் சொத்துக்களும் பாதுகாப்பாக உள்ளது. ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பதால் கோவில்களை கொள்ளையடிக்கவே  கோவில்களில் இருந்து ‘அறநிலையத்துறையே வெளியேறு’ என்ற முழக்கத்தை எழுப்புகின்றனர்.

இமாச்சலப்பிரதேசம், கர்நாடகாவை போன்று வரவிருக்கிற 5 மாநிலத் தேர்தல்களிலும் பாஜக தோற்கும். தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணி அமைந்ததுபோன்று, தேசிய அளவில் ‘இந்தியா’ அணி
வலுவாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் 2019, 2021 தேர்தல்களில் பாஜக மற்றும் அதனுடன் சேர்ந்த கட்சிகளை வீழ்த்தியது போன்று 2024 தேர்தலிலும் நிகழும். பாஜக-வை வீழ்த்தும் அதேவேளையில்,