அரியானாவில் சுரங்க விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
அரியானா மாநிலம், பிவானி பகுதியில் சுரங்க குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் கடந்த சனிக்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது பல வாகனங்கள் மண்ணில் புதைந்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இதுவரை 5 பேர் உயிரிழந்ததாகவும் 2 பேர் காயமடைந்ததாகவும் மீட்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்புப்பணிகள் தீவிரமடைந்து வருகிறது.