அசாம், செப். 1 - வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் சட்டமன்றத்தில் கூட்டத்தொடர் காலங்களில் வெள்ளியன்று தொழுகை (நமாஸ்) செய்ய மதியம் 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை 2 மணிநேர இடை வேளை வழங்கப்படுகிறது.
காலங்காலமாக நடைமுறையில் இருக்கும் இந்த இடைவேளையை அம்மாநில பாஜக அரசு திடீரென ரத்து செய்துள்ளது.
அசாம் பாஜக அரசின் இந்த மதவெறி அரசியல் முடிவுக்கு “இந்தியா” கூட்ட ணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளன. இந்நிலையில், பாஜகவின் நெருங்கிய கூட்டணிக் கட்சிகளான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் (எல்ஜேபி) கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளன. இதுதொடர்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் நீரஜ் குமார் கூறுகையில், “அசாம் அரசின் இந்த முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
இந்தியர் ஒவ்வொருவருக்கும் மத நம்பிக்கை, மரபுகளைப் பாதுகாக்கும் உரிமை இருக்கிறது” என்றார்.
அதேபோல் லோக் ஜனசக்தி கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஒன்றிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.