states

சிஏஏவை அமல்படுத்த முயற்சித்தால் போராட்டம் வெடிக்கும்

குடியுரிமை திருத்தச் சட்டம்  (சிஏஏ) அமல்படுத்தப்படு வதை யாராலும் தடுக்க முடி யாது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த மாதம் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக பேரணியின் பொழுது பேசினார்.  அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு அப்போதே கிளம்பியது. இந்நிலையில், சிஏஏவை அமல்படுத்த முயற்சித்தால் போராட்டம் வெடிக்கும் என்று அசாம் அமைப்புகள் மறைமுக மாக ஒன்றிய மற்றும் மாநில பாஜக அர சிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

அசாம் மாநிலத்தில் நான்கு ஆண்டு களுக்கு (2019) முன்பு சிஏஏ போராட் டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர். 5 பேருக்கு  அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மாநி லத்தின் எதிர்க்கட்சி தலைவர்கள், அரசு ஊழியர்கள், மாணவ அமைப்புகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடை பெற்ற கூட்டத்தில் சிஏஏவை அமல் படுத்த முயற்சித்தால் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.