அசாமில் வினாத்தாள் கசிவு காரணமாக மார்ச் 24 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற இருந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பெகு உத்தரவிட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தில் கடந்த 6ஆம் தேதி முதல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மார்ச் 21-ஆம் தேதியன்று நடைபெற இருந்து 11ஆம் வகுப்பு கணித பாடத்தின் வினாத்தாள் 20-ஆம் தேதியன்று கசிந்துள்ளது. இதைத் தொடர்ந்து கணிதத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், வினாத்தாள் பல்வேறு பகுதிகளில் கசிந்ததாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து மார்ச் 24 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற இருந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பெகு உத்தரவிட்டுள்ளார். 11ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக அசாமின் பார்பெட்டா மாவட்டத்தில் மார்ச் 20 அன்று நடைபெறவிருந்த 9 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வின் வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்தால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.