states

இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவைப் பறிக்கும் தென்னக ரயில்வே

இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவைப் பறிக்கும் தென்னக ரயில்வே

சென்னை, செப்.7- தென்னக ரயில்வே, ஐசிஎப் நிறு வனங்கள் இளைஞர்களின்  வேலை  வாய்ப்பைப் பறித்து ஓய்வு பெற்றவர் களை பணியில் நியமிப்பதற்கான அதி காரப்பூர்வ அறிவிப்பை செப்டம்பர் 5-ஆம் தேதி  வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே மற்றும் ஐ.சி.எப்., மருத்துவமனைகளின் பாரா  மெடிக்கல் பிரிவுகளில் 143 காலி பணி யிடங்கள் (குரூப் ‘சி’) நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஓய்வு பெற்ற  ரயில்வே ஊழியர்கள் மட்டும் விண்ணப் பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி  தேதி செப்டம்பர் 19. காலிப்பணியிடங்கள் விபரம் செவிலியர் கண்காணிப்பாளர்- 69, மருந்தாளுனர்-22, பிசியோதெரபிஸ்ட் (முட நீக்கியல் பிரிவு-2), ஆய்வக உதவி  தொழில் நுட்பநர்கள் (லேப் அசிஸ்ட ன்ட்- 18 இ.சி.ஜி.டெக்னீசியன்-3, மனநல ஆலோசகர் (சைக்காலஜிஸ்ட்)- 1 ஹெல்த் இன்ஸ்பெக்டர் (சுகாதார ஆய்வாளர்)-20, ரேடியோகிராபர்-4, பெர்ப்யூஷனிஸ்ட்-1, எலக்ட்ரானிக் டெக்னீசியன்-1, எக்கோ டெக்னீசியன்-2 பணியில் சேருவதற்கான தகுதிகள் ஓய்வு பெற்ற ஊழியர்கள் கட்டாய ஓய்வு பெற்றிருக்கக் கூடாது. ஏதாவது செய்த தவறு அடிப்படையில் பணியில்  இருந்து நீக்கப்பட்டிருக்கக் கூடாது. வயது வரம்பு: ஒய்வு பெற்ற ஊழி யர்கள் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். 65 வயதை அடையும் மாதத்தின் கடைசி நாள் வரை பணி புரியலாம். பணியில் சேர https://sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயி லாக விண்ணப்பிக்க வேண்டும். 143 காலிப்பணியிடங்களில் படித்து  முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை நியமனம் செய்யாமல் ஓய்வு பெற்றவர்களை கொண்டு நிரப்ப  அறிவிப்பு வெளியாகியுள்ளது.