states

img

ராஜஸ்தானில் சிபிஎம் மக்கள் போராட்டப் பயணத்திற்கு பெருகும் ஆதரவு

ராஜஸ்தானில் சிபிஎம் மக்கள் போராட்டப் பயணத்திற்கு பெருகும் ஆதரவு

4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், விதை மசோதா, மின்சார திருத்தச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முடக்கப்படுதல், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்டவைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தில் ‘ஜன சங்கர்ஷ் ஜாதா (மக்கள் போராட்டப் பயணம்)’ மிகச்சிறப்பாக முன்னேறி வருகிறது.  பிப்.,26அன்று ஹனுமன்கார் மாவட்டத்திலிருந்து தொடங்கிய இந்தப் பயணம், இதுவரை 6 மாவட்டங்களில் எழுச்சியான கூட்டங்களை முடித்துவிட்டு, ஜுன்ஜுனு மாவட்டத்தை அடைந்தது. பல்வேறு இடங்களில் இளைஞர்களும், பெண்களும் பெருந்திரளாகப் பங்கேற்று இந்த போராட்டப் பயணத்திற்கு உற்சாகமான வரவேற்பு அளித்து வருகின்றனர். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அம்ரா ராம், விஜூ கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கிஷன் பரீக் ஆகியோர் முன்னின்று நடத்தும் இந்த பயணம் மார்ச் 24 அன்று ஜெய்ப்பூரில் நிறைவு பெறுகிறது.