கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த 18 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த மத்தியப் பிரதேசத்தின் ரேவாவை சேர்ந்த 18 வயது மாணவி பாகிஷா திவாரி, நேற்று மாலை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மாணவியின் உடலை உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும் கோட்டாவில் போட்டித் தேர்வுக்காகப் பயிற்சி பெற்று வந்த மாணவர்கள் 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டில் 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.