states

img

"RSS-க்கு வேலை செய்ய விரும்புகிறேன்” - ஓய்வுபெற்ற நீதிபதி சித்தரஞ்சன் தாஸ்

ஆர்.எஸ்.எஸ்-க்கு வேலை செய்ய விரும்புகிறதாக கொல்கத்தா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் நேற்று தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிகழ்வின்போது, தான் சிறு வயது முதல் தற்போது ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருப்பதாகவும், ஆர்.எஸ்.எஸ் தன்னை அழைத்தால் மீண்டும் அந்த அமைப்பிற்கு வேலை செய்ய தயாராக இருப்பதாகவும் நேற்று பணியிலிருந்து ஓய்வுபெற்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், "பருவ வயதுப் பெண்கள் தங்களின் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்று கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் அடங்கிய அமர்வின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

;