பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. மாநிலத் தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த நாளிலிருந்து பாலி யல் வன்முறை, சட்டம் ஒழுங்கு, ஊழல், வினாத்தாள் கசிவு என பல்வேறு சம்பவங்கள் தொட ர்ந்து அரங்கேறி வருகின்றன. குறிப்பாக அரசு ஒப்பந்தத்தில் பிரம்மாண்ட ஊழல் நடை பெற்று வருவதாக எதிர்க்கட்சி கள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு ஆதார மாக ஒரு சம்பவம் நிகழ்ந் துள்ளது.
பீகாரில் உள்ள அராரியா வில் ஓடும் பத்ரா ஆற்றின் குறுக்கே, அதாவது சிக்டி பிளாக் - பத்ரியா காட் இடை யே ரூ.12 கோடி செலவில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. கட்டுமானப் பணி தொடங்கி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், செவ்வா யன்று பத்ரியா காட் என்ற இடத்தில் பாலத்தின் மூன்று தூண்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் திறக்கும் முன்பே மேம்பாலத் தின் பெரும்பாலான பகுதிகள் இடிந்து விழுந்தது.
பாலம் கட்டும் பணியில் தர மற்ற பொருட்கள் பயன்படுத் தப்பட்டதாகவும், ஊழல் மற் றும் ஒப்பந்ததாரர்களின் அலட் சியத்தால் பாலம் இடிந்து விழுந்ததாகவும் அப்பகுதி மக் கள் ஆளும் பாஜக கூட்டணி அரசு மீது குற்றம் சாட்டியுள்ள னர். பாஜக கூட்டணி ஆளும் பீகாரில் பாலம் இடிந்து விழும் சம்பவம் இது முதல்முறை யல்ல. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பல கோடி ரூபாய் செல வில் கட்டப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.