states

img

அஞ்சலக சிறு சேமிப்புக் கணக்குகளில் கடும் சரிவு!

புதுதில்லி, டிச.20- பாஜக ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தில், உரிய விலை கிடைக்காததால், விவசாயி ஒருவர் தான் விளைவித்த வெள்ளைப் பூண்டை தானே சந்தையில் கொட்டி தீவைத்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் உஜ் ஜைனி மாவட்டத்திற்கு உட்பட்ட தியோலி என்ற கிராமத்தைச் சேர்ந்த வர் சங்கர் சிர்பிரா. இளம் விவசாயி யான இவர், தன் நிலத்தில் விளைந்த வெள்ளைப் பூண்டை விற்க மந்த்சூர் கிரிஷி உபாஜ் சந்தைக்குக் கொண்டு சென்றுள்ளார். புகழ்பெற்ற பசுபதிநாத் கோயில் அமைந்துள்ள இடம்தான் மந்த்சூர்.  இங்கு பூண்டு தரத்திற்கு ஏற்ற வாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 12 ஆயிரம் வரை விலைபோனதாக கூறப்படு கிறது. ஆனால், சங்கர் சிர்பிரா-வின் பூண்டுக்கு குவிண்டால் ஒன்றுக்கு வெறும் ரூ.1,100 மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்துச் சென்ற சங்கருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தான் கொண்டு வந்த 160 கிலோ வெள்ளைப் பூண்டை யும் சந்தையிலேயே கொட்டி அதற்கு தீ வைத்துள்ளார். சங்கர் சிர்பிரா-வின் இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சக விவசாயிகள் அவ ருக்கு ஆதரவாக திரண்டு வந்ததுடன், எரியும் நெருப்பை சுற்றி நின்று ‘ஜெய் ஜவான்! ஜெய் கிசான்!’, ‘பாரத் மாதா கீ ஜெ!’, ‘இன்குலாப்! ஜிந்தாபாத்!’ என முழக்கமிட்டுள்ளனர். “இந்த பூண்டை விளைவிக்க நான் இதுவரை 2.5 லட்சம் செலவு செய் துள்ளேன். ஆனால், எனக்கு 1 லட்சம் ரூபாய் கூட விலை கிடைக்கவில்லை. எத்தனை வருடங்கள்தான் இது போன்ற இழப்பை எங்களால் தாங்க முடியும்? வேளாண் விளைபொருட்க ளுக்கு குறைந்தபட்ச விலையை அரசு நிர்ணயிக்காததால் இந்த துயரம் எங்க ளுக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அந்த கோபத்தைத்தான், பூண்டுக்கு நெருப்பு வைத்து தீர்த்துக் கொண் டேன்’’ என்று விவசாயி சங்கர் சிர்பிரா தனது சோகத்தை ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இதனிடையே, திட்டமிட்டு, தீ வைக் கும் நோக்கத்துடனேயே விவசாயி சங்கர் சிர்பிரா சந்தைக்கு வந்ததாக, வேளாண் அதிகாரி ஜெகதீஷ் பப்பர் காவல்துறையில் புகார் அளித்துள் ளார். விளைபொருட்களுக்கு கட்டுபடி யான விலை கிடைக்காததால் தாங் கள் சாகுபடி செய்த விளைபொருட் களை விவசாயிகளே தீயிட்டு அழிக் கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதி கரித்து வருகிறது. அண்மையில், ஆந் திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்த விவ சாயி சாகலி வெங்கடேஸ்வரலு வெங் காய மூட்டைகளுக்கும், அதற்கு முன்பு, மகாராஷ்டிர மாநிலம் நாசிக் கைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தக் காளி மூட்டைக்கும் தீயிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.