states

img

பிரதமராக 3-ஆவது முறையாக மோடி இன்று பதவியேற்பு

புதுதில்லி, ஜூன் 8- நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி தொட ர்ந்து மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமையன்று பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில்  இரவு 7.15 மணியளவில் நடை பெறும் பதவியேற்பு விழா,  குடியரசுத் தலைவர் திரௌ பதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரக சியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு விழா விற்கு வங்கதேசம், இல ங்கை, பூடான், நேபாளம், மாலத்தீவு உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர் களுக்கு அழைப்பு விடுக்கப்  பட்டுள்ளது. அது மட்டு மல்லாமல், நாட்டில் பல்  வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய நபர்கள்,  பல்வேறு மதத் தலைவர்கள், விளையாட்டு, சினிமா பிர பலங்கள், பலதுறைகளில் பணியாற்றும் தொழிலாளர் கள், ஊழியர்கள், பத்ம விருது  பெற்றவர்கள், மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்  றவர்கள் என பல்வேறு தரப்பி னர் அழைக்கப்பட்டு உள்ள னர்.  இதையொட்டி தில்லி  முழுவதும் பாதுகாப்பு வளை யத்துக்குள் கொண்டுவரப் பட்டுள்ளது. டிரோன்கள் பறக்  கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.