தில்லி மாநிலம் கடும் வெயில் மற்றும் மோடி அரசின் பழி வாங்கல் நடவடிக்கை (யமுனை நதி நீர் நிறுத்தம்) என இரண்டு பிரச்சனைகளால் கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கியுள் ளது. தில்லி முழுவதும் உள் மாநில மற்றும் அண்டை மாநில தண்ணீர் லாரிகளே குடிநீர் பிரச்ச னையை தீர்த்து வரும் நிலை யில், தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஆம் ஆத்மி ஆளும் தில்லி அரசு. கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,”யமுனை வாரி யத்தை கூட்டி தில்லி தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இடைக்காலமாக தில்லிக்கு இமாச்சல அரசு 137 கனஅடி உபரி நீரை திறந்துவிட வேண்டும்” என உத்தரவிட்டது. இந்நிலையில், தில்லி குடி நீர் பிரச்சனை வழக்கு வியாழ னன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிர சாந்த் குமார் மிஸ்ரா, பிரசன்னா அமர்வு,”மாநிலங்களுக்கு இடையில் யமுனை நதி நீரினை பகிர்ந்து கொள்வது என்பது மிகவும் சிக்கலான மற்றும் உணர்வுப்பூர்வமான விஷயம். இடைக்கால அடிப்படையில் கூட முடிவெடுக்கும் அளவுக்கு நீதிமன்றத்துக்கு தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லை. எனவே மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் வழங்கக் கோரி யமுனை வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்” என தில்லி அரசுக்கு அறிவுரை கூறியது. கைவிரித்த இமாச்சல் அரசு கடந்த வாரம் தில்லி குடிநீர் பிரச்சனை தொடர்பாக யமுனை நதிநீர் வாரியம் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. இதுதொடர்பாக வியா ழனன்று யமுனை நதிநீர் வாரி யம் உச்சநீதிமன்றத்தில் பிரமா ணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் இமாச்சலப்பிரதேச அரசு, ஹரியானாவுக்கு அனுப்பிய கடி தத்தையும் இணைத்து குறிப் பிட்டிருந்தது. அக்கடிதத்தில், ”உச்சநீதிமன்ற உத்தரவுப் படி 137 கன அடி உபரி நீர் அளவுக்கு இமாச்சலப்பிரதேசத்தில் சேமிப்பில் இல்லை. மலை மாநி லம் பயன்படுத்தாமல் உள்ள உபரி நீரை ஏற்கனவே தடை யில்லாமல் ஹரியானாவில் உள்ள ஹத்னிகுண்டு தடுப்ப ணைக்கு அனுப்பி வருகிறோம். இதனால் ஹரியானா அரசு தில்லிக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளதை உச்சநீதிமன் றத்திடம் தாக்கல் செய்துள்ளது யமுனை நதிநீர் வாரியம். இதன்மூலம் தில்லிக்கு தண் ணீர் தர முடியாது என்றும், ஹரி யானா அரசிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் இமாச்சல் அரசு நேரடியாக யமுனை வாரியத்திடம் கூறி யுள்ளது. ஆனால் ஹரியானா அரசு எவ்வித விளக்கமும் அளிக் காமல் காலம் தாழ்த்தி வரு கிறது. இதனால் தில்லியில் இன் னும் தண்ணீர்ப் பிரச்சனை நீடித்து வருகிறது.