states

img

டாடா சன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் சாலை விபத்தில் பலி

புதுதில்லி, செப்.4- மும்பை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (வயது 54) உயிரிழந்தார்.  அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு மெர்சிடிஸ் காரில் மிஸ்திரி ஞாயிறன்று சென்றார்.  பிற்பகல் 3.15 மணியளவில் அவரது கார் பால்கர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலைத் தடுப்பில் மோதியது. இதில் மிஸ்திரி பலியானதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. மற்றொருவர் ஜஹாங்கீர் பின்ஷா பந்தோல் என தெரிய வந்துள்ளது. வாகனத்தில் மொத்தம் 4 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்களில், விபத்தில் காயமடைந்த மற்ற 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  2012 முதல் 2016 வரை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்திரி.

;