ஓஹியோ, மே 29- கடலில் மூழ்கிய டைட்டா னிக் கப்பலை பார்க்க பய ணம் மேற்கொள்வதற்காக மீண்டும் ஒரு புதிய நீர் மூழ்கிக் கப்பல் தயாராகி வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த கப்பலில் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் கோடீஸ்வரர் லேரி கான்னர் (Larry Connor) பயணம் மேற் கொள்ள உள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு பயணம் தொடரும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. உலகில் மிக ஆபத்தான பயணங்களில் ஒன்று டைட் டானிக் கப்பலை காணச் செல்வது. மிகப்பெரிய கோ டீஸ்வரர்கள் சாகசப் பயணம் என்று கூறிக் கொண்டு இவ்வாறான ஆபத்தான இடங்களுக்கு பயணிப்பது வழக்கம். சிலர் இத்தகைய பயணத்தில் பலியான சம்ப வங்களும் உண்டு. இதே போன்று கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் டைட்டானிக் கப் பலை பார்வையிடுவதற்காக ஒரு சாகச சுற்றுலாவை மேற் கொண்டது. இந்த பயணத் திற்காக 21 அடி நீளத்தில் ‘டைட்டன்’ என்ற சிறப்பு நீர் மூழ்கிக் கப்பலை அந்த நிறு வனம் தயாரித்து ஐந்து பேரு டன் பயணம் மேற்கொண்டது. அந்த பயணத்தில் கடலின் ஆழத்தில் செல்லச் செல்ல திடீரென நீர்மூழ்கி கப்பலுட னான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தீவிர தேடுதலுக்கு பிறகு நீர் மூழ்கி கப்பல் வெடித்து ஐந்து பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் 74 வயதான லேரி கான்னர் டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்கான பயணத் திற்கு ட்ரைடன் சப்மரைன்ஸ் என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார்.அதனை தொடர்ந்து அவர் பயணத் திற்காக இரண்டு பேர் பய ணிக்கும் வகையிலான நீர் மூழ்கி கப்பல் வடிவமைக்கப் பட்டு வருகிறது. அந்த கப்பல் 12,500 அடி ஆழம் வரை செல்லும் என வும் இந்த நீர்மூழ்கி மூலம் அறிவியல் ஆய்வுகளும் மேற்கொள்ள உள்ளதாக வும் கூறப்பட்டுள்ளது.