சென்னை, அக்.11- தமிழக மக்கள் ஒற் றுமை மேடையின் ஒருங்கி ணைப்பாளர்கள் பேராசிரி யர் அருணன், க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு: நவராத்திரி விழாவானது வீட்டில் கொலு வைத்து அக் கம்பக்கத்தவரை அழைத்து உறவு கொண்டாடும் விழா வாகத் தமிழகத்தில் நடக்கி றது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் அதை முஸ் லிம்கள் உள்ளிட்ட பிற மதத் தவர் மீது வெறுப்பைக் கக் கும் விழாவாக மாற்ற ஆர்எஸ்எஸ் பரிவாரம் முயற்சித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பிரபல பாடகர் தர்மேந்திர பாண்டே சிறுபான்மையோ ருக்கு எதிராக விஷத்தைக் கக்கியுள்ளார். “பிரதமர் மோடி இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவித்த வுடன் சிறுபான்மையோ ருக்கு எதிராக ஆயுதம் ஏந்த இந்துக்கள் தயாராக வேண் டும்” என்று கொக்கரித்துள் ளார். மத்தியப்பிரதேசம் மற் றும் குஜராத்தில் நவராத்திரி பந்தலுக்குள் பிற மதத்தவர் வரக்கூடாது, முஸ்லிம் போலீ சார் பணியில் ஈடுபடுத்தப் படக் கூடாது, பக்கத்தில் முஸ்லிம்கள் கடைகள் இருந் தால் அடைக்கப்பட வேண்டும் என்று விஎச்பி போன்ற சங் பரிவாரங்கள் உத்தரவு போடுகின்றன. அதை போலீ சாரும் அமல்படுத்துகிறார்கள். நவராத்திரி விழாவிற்கு ஊறுவிளைவித்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அங்கேயே குஜராத் போலீ சார் முஸ்லிம் இளைஞர் களை லத்தியால் அடிப்ப தும், அதை வரவேற்கும் வகையில் வெறிகொண்ட கூட்டம் ‘பாரத் மாதா கி ஜே’ என்று உற்சாகக் கோஷம் போடுகிற காட்சியும் சமூக ஊடகங்களில் வெளியாகி யுள்ளது. மோடி ஆட்சியில் நாடு எத்தகைய அழிவுப் பாதை யில் சென்று கொண்டிருக்கி றது என்பதை இந்தக் கொடூ ரங்கள் உணர்த்துகின்றன. இந்த நிலை தமிழ்நாட்டில் வராமலிருக்க சங் பரி வாரத்தை மக்களிடமிருந்து முழுமையாகத் தனிமைப் படுத்த வேண்டும்.