states

காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு

சென்னை, செப். 20- தமிழ்நாட்டில் வரும் அக். 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தொடக்கக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தொடக்ககல்வித்துறை இயக்குநர், அறிவொளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ' தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் காலாண்டுத்தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கு ஒன்றிய அளவில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரி யர்களுக்கும் அக்டோபர் 6ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை 3 நாட்கள் பயிற்சி நடத்தப்பட உள்ளது. எனவே, தொடக்கக்கல்வி இயக்க நிர்வாகத்தின்கீழ் செயல்படும் அனைத்து தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் 1ஆம் முதல் 5ஆம் வகுப்புகள் வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் ( தலைமை ஆசிரியர் உட்பட) ஒன்றிய அளவில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.  முதல் பருவத்தேர்வு விடுமுறைக்குப் பின் அக்டோபர் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புகள் வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியில் கலந்து கொள்வதால் இந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ஆம் முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டும் அந்த நாட்களில் பள்ளிக்கு வருகை புரிய தேவையில்லை. நடுநிலைப்பள்ளிகளில் 6ஆம் முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாண வர்களுக்கு அக்டோபர் 6ஆம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளி செயல்படும்’ என அதில் கூறியுள்ளார்.

;