சென்னை,ஜூலை 3- உலகப் புகழ் பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை யான சென்னை ஐசிஎஃப்-ல் தற்போது வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் அதிக கவனம் செலுத் தப்படுகிறது. இங்கு இதுவரை 25 வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் - திருநெல் வேலி இடையேயும், சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடை யேயும் தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரி கள் கூறுகையில், “ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - திருப்பதி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கு தேவை இருக்கிறது. ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகு, கால அட்டவணை, கட்டணம், பயண நேரம் உள்ளிட்ட விவரங்கள் அறி விக்கப்படும். மேலும், தூங்கும் வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ரயில், விரைவில் பயன்பாட் டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெறுகின்றன என்றும் அவர் கூறினார்.