states

பெரம்பூர் பொதுக்கூட்டத்திற்கு வருவோர் கவனத்திற்கு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று அதன் நிறைவாக செப்டம்பர் 5 ( திங்கட்கிழமை)  அன்று பெரம்பூர் சத்தியமூர்த்திநகர் முல்லை நகர் பேரூந்து நிலையம் அருகே மாநிலந்தழுவிய பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் வண்டலுhர் 400 அடி வெளி வட்டச் சாலை வழியாக செங்குன்றம் வந்து சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலை வழியாக மூலக்கடையை அடையலாம். பின்னர் அங்கிருந்து எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை வழியாக எத்திராஜ் சாலையில்(இடது புறம்) திரும்பி தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை வழியாக ராஜரத்தினம் நகருக்கு முன்பு வலதுபுறம் திரும்பி பொதுக்கூட்டத் திடலை வந்தடையலாம். சென்னை புறவழிச்சாலை (தாம்பரத்திற்கு முன்பாக) வழியாக  வருபவர்கள் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மூலக்கடை வந்து அங்கிருந்து எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை வழியாக எத்திராஜ் சாலையில் (இடது புறம்) திரும்பி தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை வழியாக ராஜரத்தினம் நகருக்கு முன்பு வலதுபுறம் திரும்பி பொதுக்கூட்டத் திடலை அடையலாம். கோயம்பேடு பேரூந்து நிலையத்தில் இருந்து வருபவர்கள் 46 ஜி பேரூந்தில் ஏறி முல்லை நகர் பேரூந்து நிலையத்தில் இறங்கவும். வாகனங்களில் வருவோர் தோழர்களை இறக்கிவிட்டு மேடைக்கு பின்புறமுள்ள இந்திரா நகர் சாலை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்தவும். தென்சென்னை மற்றும் மத்திய சென்னையிலிருந்து வரும் வாகனங்கள் எம்.கே.பி நகர் தெற்கு பகுதியில் விவேகானந்தா வித்யாலயா அருகில் நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்புக்கு தோழர்கள் ஆர்.லோகநாதன் 9080496070 சரவணதமிழன் 9884198781

;